மாணவர்களுக்கு ’ஷாக்’ கொடுத்த பள்ளிக்கல்வித்துறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أغسطس 28، 2023

Comments:0

மாணவர்களுக்கு ’ஷாக்’ கொடுத்த பள்ளிக்கல்வித்துறை!



தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுக்கான பொதுவினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு இறுதியில் மட்டுமல்லாது மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொது தேர்வு போலவே நடைபெற உள்ளது.

2023 - 24ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11, 12ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27ம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28ம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதனிடையே 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة