பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் அரசுப்பள்ளியில் படிப்பை முடித்து 7.5% இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் விவரம் - அமைச்சர் பொன்முடி பேட்டி - - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أغسطس 02، 2023

Comments:0

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் அரசுப்பள்ளியில் படிப்பை முடித்து 7.5% இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் விவரம் - அமைச்சர் பொன்முடி பேட்டி -

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் அரசுப்பள்ளியில் படிப்பை முடித்து 7.5% இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் விவரம் - அமைச்சர் பொன்முடி பேட்டி -

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 16,516 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்: அமைச்சர் பொன்முடி பேட்டி

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 22,000 மாணவர்கள் பங்கேற்றனர் அதில் 16,516 மாணவர்கள் தேர்வு : அமைச்சர் பொன்முடி பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 22,000 மாணவர்கள் பங்கேற்றனர் அதில் 16,516 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 5,497 பேர் கல்லூரிகளில் சேர அனுமதி வாங்கிவிட்டனர் மற்ற மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்றனர் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முதல் சுற்று திறந்த சுற்றில் 7,105 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 22,000 மாணவர்கள் பங்கேற்றனர் அதில் 16,516 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 5,497 பேர் கல்லூரிகளில் சேர அனுமதி வாங்கிவிட்டனர்; மற்ற மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்றனர். முதல் சுற்று திறந்த சுற்றில் 7,105 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 4,237 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அரசுப்பள்ளியில் படிப்பை முடித்து 7.5% இடஒதுக்கீட்டில் 1019 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.1.11 லட்சம் மாணவ, மாணவிகள் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரவுள்ளனர். 1.01 லட்சம் மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரி முதல்வர்களிடம் மாதிரி பாடத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொதுப்பாடத்திட்டம் என்பது கல்லூரிகளுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும். சர்வதேச அளவில் நமது கல்லூரி கல்வியின் தரத்தை உயர்த்துவதே இந்த மாதிரி பொது பாடத்திட்டத்தின் நோக்கம் என குறிப்பிட்டார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة