ஜூலை 29-ல் மொஹரம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 19, 2023

Comments:0

ஜூலை 29-ல் மொஹரம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

ஜூலை 29-ல் மொஹரம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் ஜூலை 29-ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிவிப்பில், ''துல்ஹஜ் மாதம் 29-ம் தேதி (ஜூலை 18) மாலை மொஹரம் மாத பிறை சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஜூலை 20-ம் தேதி மொஹரம்மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் யொமே ஷஹாதத், ஜூலை 29 ஆகும்'' என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews