மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க இலவச கருத்தரங்கு - இன்றும், நாளையும் நடக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يوليو 22، 2023

Comments:0

மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க இலவச கருத்தரங்கு - இன்றும், நாளையும் நடக்கிறது

மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க இலவச கருத்தரங்கு - இன்றும், நாளையும் நடக்கிறது Free seminar to boost students' memory - happening today and tomorrow



சேலத்தில் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க இலவச கருத்தரங்கு

இன்றும், நாளையும் நடக்கிறது சேலம், ஜூலை.22- சேலம் சின்னதிருப்பதியில் ஜெய்ராம் கலை அறிவியல் கல்லூரியில், ‘மெகா மெமரி” என்ற தலைப்பில் மாணவ- மாணவிகளின் நினை வாற்றலை அதிகரிக்க இலவச கருத்தரங்கு ஆங்கிலத்தில் நடக்கிறது. இந்த கருத்தரங்கு இன்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11, மதியம் 3 மணி, மாலை 6.30 மணி ஆகிய நேரங்களில் நடக்கிறது.

கருத்தரங்கை உலக நினைவாற்றல் அமைப்பின் தலைவர் ஜெய சிம்ஹா தலைமை தாங்கி நடத்துகிறார். அப்போது அவர், நினைவு கொள்ளும் நுட்பங்கள், சுலபமாக கற்கும் நுட்பம், படிப்பதை நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக் கொள்ளுதல், கவனம் செலுத்துவதை அதிகரித்தல் உள்ளிட்டவை குறித்து மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக ஆங்கிலத்தில் பயிற்சி அளிக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை ஜெய சிம்ஹா மைன்ட் கல்வி மைய நிர்வாகிகள் செய்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة