எட்டாம் வகுப்பு சான்றிதழ்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يوليو 27، 2023

Comments:0

எட்டாம் வகுப்பு சான்றிதழ்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

எட்டாம் வகுப்பு சான்றிதழ்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

தொழிற் கல்வி படிப்புகளில் சேர விரும் பும் மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு சான்றிதழ் வழங்க சம்பந் தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப் பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2, பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வு எழுதாதவர்கள் உயர்கல்வியை தொடர வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, இத்தகைய மாண வர்கள் தொழிற்கல்வி படிப்புக ளில் சேர்க்கை பெறுவதற்காக ஐடிஐ -க்கு செல்லும் போது 8- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றி தழ் வேண்டுமென கேட்கப்படுவ தாக தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவர்கள் சேருவதற்கு ஏதுவாக தேவை யுள்ளவர்களுக்கு எட்டாம் வகுப்பு சான்றிதழ் வழங்கி பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة