ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு - ஆசிரியர் சங்கங்களுடன் இன்று பேச்சு வார்த்தை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يوليو 25، 2023

Comments:0

ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு - ஆசிரியர் சங்கங்களுடன் இன்று பேச்சு வார்த்தை

ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு ஆசிரியர் சங்கங்களுடன் இன்று பேச்சு வார்த்தை

ஆசி ரியர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் போராட் டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சங்கங்களு டன், பள்ளிக் கல்வி இயக்கு நர் இன்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த அதிமுக ஆட்சியின் போது, ஆசிரியர்கள் மற் றும் அரசு ஊழியர்கள் சார்பில் உருவாக்கப்பட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய மாபெ ரும் போராட்டம் நடத் தப்பட்டது. இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டபோராட் டம் ரத்து செய்யப்படுவ தாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு ஆசி ரியர் சங்கங்களின் கூட்ட மைப்பு ஒன்றை தனியாக உருவாக்கிய சில சங்கங்கள் துள்ளது. மீண்டும் கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தன. அந்த கோரிக் கைகள் குறித்து பள்ளிக் கல்வி துறையின் அதிகாரி கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன. மேலும், இந்த மாதம் 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அந்த கூட்டமைப்பின் சார்பில் கடந்த வாரம் அறிவிப்பும் வெளியிடப் பட்டது.

அதற்காக, பேரா சிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இன்று பேச்சு வார்த்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்த இந்த பேச்சுவார்த்தை யில் பங்கேற்க உள்ள சங்கங் களின் சார்பில் தலா ஒருவர் மட்டுமே பங்கேற்க வேண் டும் என்று பள்ளிக்கல்வித் துறை நிபந்தனை விதித் துள்ளது. இன்று நடக்க இருக்கிற பேச்சுவார்த்தை யில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்து வது தொடர்பான கருத்து கள் முக்கிய இடம்பிடிக்க உள்ளன. இது தவிர 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மீதும் சங்கப் பிரதிநிதிகள் பேச இருக்கின்றனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة