இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 20, 2023

Comments:0

இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் People with disabilities can apply for setting up e-service center - District Collector

மதுரையில் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் தனியார் இ - சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல் மதுரை மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள்தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை கலெக்டர் திருமதி.மா.சௌ.சங்கீதா.,இ.ஆ.ப., அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கவுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் https://www.tnesevai.tn.gov.in/ மற்றும் http://tnega.tn.gov.in ஆகிய இணையதளங்களில் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழங்கும் ப்ரீபெய்ட் ப்ரீபெய்ட் இ-வாலட் மாதிரி(Prepaid ewallet model), ஆதார் பயோமெட்ரிக் உள்நுழைவு, போன்ற வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன்படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்க, எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இசேவை மைய கட்டடத்தில் கணினி பிரிண்டர், ஸ்கேனர்

மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 2 Mbps, அதிவேக அலைவரிசையுடன் தொடர்ச்சியான, தடையற்ற இண்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். தமிழ்நாடு மின்ஆளுமை முகமையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி., எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ - சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.

தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகளில் சுயவேலைவாய்ப்புக்கடன் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படும்.

மதுரை மாவட்டத்தில் படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இ-சேவை மையம் அமைத்து வருமானம் ஈட்டி பயன்பெறலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2023 ஆகும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews