கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை - இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يونيو 12، 2023

Comments:0

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை - இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை இன்றுமுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

சென்னை, ஜூன் 11: தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந் தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 12) முதல் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இள நிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. மாணவர்கள் விண் இதில் சேர நிகழ் கல்வியாண்டில் 2.46 லட்சம் ணப்பித்தனர்.அதில் தகுதிபெற்றவர்களுக்கானதரவரிசைப்பட்டி யல் கடந்த மே 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கல்லூரிகள் அளவில் மே 29-இல் தொடங்கியது. முதல் 2 நாள்கள் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வில் 3,363 பேருக்கு இடங்கள் வழங் கப்பட்டன. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 25,253 மாணவிகள் உள்பட 40,287 பேருக்கு அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவற்றில் 10,918 மாணவிகள் ‘புது மைப் பெண் திட்டத்தில்' பயன் பெறுவர்.

தொடர்ந்து எஞ்சியுள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண் டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி ஜூன் 20- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கலந்தாய்வு முடிந்தபின் முத லாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 22-ஆம் தேதி முதல் வகுப்பு கள் தொடங்கும். கூடுதல் விவரங்களை www.tngasa.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة