ரேஷன் விற்பனையாளர் தேர்வு பட்டியல் - 4 மாதமாக தேர்வர்கள் காத்திருப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مايو 01، 2023

Comments:0

ரேஷன் விற்பனையாளர் தேர்வு பட்டியல் - 4 மாதமாக தேர்வர்கள் காத்திருப்பு!

ரேஷன் விற்பனையாளர் தேர்வு பட்டியல் இன்று வருமா... நாளை வருமா.....

4 மாதமாக தேர்வர்கள் காத்திருப்பு

தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 503 சேல்ஸ்மேன் மற்றும் உதவியாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்காக 2 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப் பட்டது. இதற்கான நேர்முகத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடைபெற்றது. ஜனவரி முதல் வாரத்தில் பணி ஆணை வழங்கப்படும் என்று கூட்டுறவு துறை சார்பில் அப்போது தெரி விக்கப்பட்டது.

இதேபோல் ராணிப் பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சங்கங்க ளின் சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 118 விற்பனையாளர் காலி பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக அறி விப்பு வெளியிடப்பட்டது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி கல்வி தகுதியாக நிர்ணயிக் கப்பட்டது.

இருப்பினும், எம்பில் படித்தவர்கள், முதுகலை பட்ட பட்டதாரிகள், இன்ஜினி யரிங் படித்தவர்களும் விண்ணப்பித்திருந்தனர். 6 ஆயிரத்து 57 பேர் விண் ணப்பங்கள் குவிந்தன.

தகுதிவாய்ந்த விண்ணப் பதாரர்களுக்கு டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் பல்வேறு செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பப்பட்டு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட் டனர். அவர்களுக்கான கல்வி சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு, பின்னர் நேர்முக தேர்வு நடந்தது.

இதில் வருவாய்த்துறை சார்ந்த பொது அறிவு, கூட் டுறவுத்துறை சம்மந்தப் கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு நிலை களில் நேர்முக தேர்வு நடந்தது.

தேர்வு நடந்து 4 மாதங்கள் கடந்தும் தேர் கியுள்ளோம். வானவர்கள் குறித்த விபரம் வெளியாகவில்லை.

இது குறித்து தேர்வு எழுதியவர்கள் கூறியதா வது: நேர்முக தேர்வு முடிந்து பல மாதங்கள் கடந்த பிறகும் இதுநாள் வரை முடிவு வெளியிடப் படவில்லை.

ஜனவரி முதல் வாரமே தேர்வு முடிவுகள் வெளியிடப்ப டும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந் தனர். ஆனால் ஏப்ரல் மாதம் முடியவுள்ள நிலை யில் முடிவுகள் வெளி யிடப்படவில்லை. இது னால் நாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளா

உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தகுதியானவர்களை உடனடியாக ரேஷன் கடை விற்பனையாளர்களாக நிய மிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة