ஆதிதிராவிடா்-பழங்குடியின மாணவா்களுக்கு புதிய விடுதிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 16, 2023

Comments:0

ஆதிதிராவிடா்-பழங்குடியின மாணவா்களுக்கு புதிய விடுதிகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்காக ரூ.82.02 கோடியில் கட்டப்பட்டுள்ள விடுதிகள், பள்ளிக் கட்டிடங்கள், ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டிடங்களை முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைசார்பில் ரூ.42.46 கோடி மதிப்பில்ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான 21 விடுதிகள், ரூ.16.59 கோடியில் 9 பள்ளிக் கட்டடங்கள், ரூ.22.98 கோடியில் 4 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இதில்,அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, என்.கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர் உ.மதிவாணன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத் துணைத் தலைவர் செ.கனிமொழி பத்மநாபன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலாளர் ஜி. லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, பழங்குடியினர் நல இயக்குநர் எஸ்.அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரூர் மாவட்டம் கடவூர், மதுரை ரேஸ்கோர்ஸ், திருச்சி மாவட்டம் துறையூர், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தல், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ரூ.18.89கோடியில் பள்ளி மாணவர்களுக்கான 9 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரம், தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர், கோட்டூர், திருவாரூர் மாவட்டம் பேரளம் மற்றும் காஞ்சிபுரத்தில் ரூ.6.80 கோடியில் 5 விடுதிகள், கரூர் மாவட்டம் தாந்தோணிமலை, தஞ்சாவூர்மாவட்டம் ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் மருதன்கோன்விடுதி, மதுரை மாவட்டம் சொக்கிகுளம், சென்னை ராயபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் ரூ.16.76 கோடியில் கல்லூரி மாணவர்களுக்கான 7 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் ரெட்டமங்கலம், செங்கல்பட்டு மாவட்டம்மீனம்பாக்கம், கடலூர் மாவட்டம் சேப்பாக்கம், மேலவன்னியூர் மற்றும் சிதம்பரம் நந்தனார் பள்ளி,சேலம் மாவட்டம் வெள்ளிகவுண்டனூர், புதுக்கோட்டை மாவட்டம் முள்ளன்குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டம் எலத்தூர், சேலம் மாவட்டம் தாத்தியாம்பட்டியில் உள்ள 9 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ரூ.16.59 கோடியில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், திருப்பத்தூர் மாவட்டம் கீழுர், திருவண்ணாமலை மாவட்டம் புளியம்பட்டி, நீலகிரி மாவட்டம் மு.பாலாடா, நாமக்கல் மாவட்டம் செங்கரையில் ரூ.22.98 கோடியில் ஏகலைவா மாதிரி உண்டுஉறைவிடப் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், தாட்கோ மேலாளர்கள் மற்றும் செயற் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டுக்காக ரூ.2.04 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள 23 வாகனங்களின் செயல்பாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு, ரூ.55 கோடியில் வீடுகளை வாங்குவதற்கான மானிய ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

ஆதிதிராவிடா்-பழங்குடியின மாணவா்களுக்கு புதிய விடுதிகள்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு ரூ.82 கோடியில் கட்டப்பட்ட விடுதிகள், பள்ளிக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூா் கடவூா், மதுரை ரேஸ்கோா்ஸ், திருச்சி துறையூா், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், மதுரை உசிலம்பட்டி, சிவகங்கை கொம்புக்காரனேந்தல், காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூா், நாகை வேதாரண்யம் ஆகிய இடங்களில் பள்ளி மாணவா்களுக்காக விடுதிக் கட்டடங்கள் திறக்கப்பட்டன. மேலும், திருநெல்வேலி குலவணிகா்புரம், தேனி எரசக்கநாயக்கனூா், கோட்டூா், திருவாரூா் பேரளம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பள்ளி மாணவியா்களுக்காக விடுதிக் கட்டடங்கள் திறக்கப்பட்டன.

கரூா் தாந்தோணிமலை, தஞ்சாவூா் ஒரத்தநாடு, புதுக்கோட்டை மருதன்கோன்விடுதி, மதுரை சொக்கிகுளம், சென்னை ராயபுரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கல்லூரி விடுதிக் கட்டடங்களையும் முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

காஞ்சிபுரம் ரெட்டமங்கலம், சென்னையை அடுத்த மீனம்பாக்கம், கடலூா் மாவட்டம் சேப்பாக்கம், மேலவன்னியூா், சிதம்பரம் நந்தனாா்பள்ளி, சேலம் மாவட்டம் வெள்ளிகவுண்டனூா், புதுக்கோட்டை மாவட்டம் முள்ளன்குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டம் எலத்தூா், சேலம் மாவட்டம் தாத்தியாம்பட்டி ஆகிய இடங்களில் பள்ளிகளுக்காக வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடக் கட்டடங்களைஅவா் திறந்துவைத்தாா்.

இதேபோல, திருப்பத்தூா் கீழுா், திருவண்ணாமலை புளியம்பட்டி, நீலகிரி மு.பாலாடா, நாமக்கல் செங்கரை ஆகிய இடங்களில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்களையும் அவா் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், பி.கே.சேகா்பாபு, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தூய்மைப் பணியாளா்கள் சொந்த வீடு வாங்க மானியத் திட்டம் சென்னை, மே 15: தூய்மைப் பணியாளா்கள் சொந்த வீடு வாங்குவதற்கு மானியம் அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவா்களில், வீடற்ற 500 பேருக்கு தகுதியின் அடிப்படையில் தலா ரூ.11 லட்சம் மானியம் அளிக்கப்பட உள்ளது. அவா்களில், ஏழு பேருக்கு மானியம் அளிப்பதற்கான உத்தரவை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

23 வாகனங்கள்: முன்னதாக, தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, தாட்கோ நிறுவனத்தின் சாா்பில் மாவட்ட மேலாளா்கள், செயற்பொறியாளா்களின் பயன்பாட்டுக்காக 23 வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews