10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியா? கவலை வேண்டாம் - மே 23 முதல் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 19, 2023

2 Comments

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியா? கவலை வேண்டாம் - மே 23 முதல் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்



10 ம் வகுப்பு - மே 23 முதல் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

மே 23 முதல் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் துணைத்தேர்வு தொடங்கும்.⚡️
CLICK HERE TO DOWNLOAD Result Analysis (Choose Telegram)

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியா? கவலை வேண்டாம்..

துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 9,14,320 மாணவர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவியர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களை விட மாணவியர் 6.50 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் அறிந்துக்கொள்ளலாம்.

அதேபோல் தேர்வு முடிவுகள் செல்போன் எண்ணுக்கு SMS வாயிலாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 பேர் தேர்ச்சி பெற தவறியுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு துணைத் தேர்வு ஜுன் மாதத்தில் நடத்தப்படும்.

மே 23 ஆம் தேதி முதல் 27-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

*✍️தமிழ் பாடத்தை விட அதிக பேர் ஆங்கிலத்தில் தேர்வாகியுள்ளனர். அதேபோல் ஆங்கிலத்தில் 89 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், தமிழில் ஒருவர் கூட இல்லை.*

*🔹🔸உடனடி அறிவிப்பு: துணைத் தேர்வு விண்ணப்ப தேதி...*

*✍️10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான கையோடு துணைத் தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.*

*✍️அதன்படி 10ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத மே 23-27 வரை விண்ணப்பிக்கலாம்.*

*✍️ஜூன் மாதத்தில் துணைத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மனம்தளராமல் விடாமுயற்சியோடு துணைத் தேர்வுக்கு தயாராகுங்கள்.*

*🔹🔸எத்தனை பள்ளிகள் 100% தேர்ச்சி விவரம்*

*✍️10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,638.*

*✍️இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,502*

*✍️உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,136.*

*✍️இதில், 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718.*

*✍️அதேபோல், 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026*

*🔹🔸10ம் வகுப்பு தேர்வு: பெரம்பலூர் முதலிடம்*

*✍️10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதலிடம் பிடித்துள்ளது.*

*✍️சிவகங்கை 97.53%,*

*✍️விருதுநகர் 96.22% தேர்ச்சி விழுக்காடுடன் 2,3ம் இடம் பிடித்துள்ளது.*

*✍️கிருஷ்ணகிரி 85.36%,*

*✍️நாகை 84.41%,*

*✍️ராணிப்பேட்டை 83.54% தேர்ச்சி விகிதத்துடன் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளது.*

*✍️10ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 comments:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews