தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أبريل 15، 2023

Comments:0

தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை, ஏப். 14: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியா ளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழி காட்டும் மைய துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து வெளி யிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட் டும் மையத்தில் காலியாக உள்ள 3 அலுவலக உதவியாளர் பணி யிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணிகளுக்கான கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி. எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கான வயது வரம்பு 37, மிகவும் பிற்படுத் தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு 34, பொதுப் பிரிவின ருக்கு 32.

கரோனாவில் பெற்றோரை இழந்தவர்கள், பெற்றோரில் ஒருவரை இழந்த பொதுப் பிரிவினர், பெற்றோர் இருவரையும் இழந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், அருந்ததி யர் இனத்தைச் சேர்ந்த ஆதரவற்ற விதவையர் (தமிழ் வழி கல்வி பயின்றவர்) முன்னுரிமையுடையவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத் துடன் கல்விச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முன்னுரிமை நகல் சான்று ஆகியவற்றுடன் சுய விலாசமிட்டு ரூ. 25 தபால் தலையுடன் கூடிய உறையை இணைத்து, துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட் டும் மையம், கோ. புதூர், மதுரை-7 என்ற முகவரிக்கு வருகிற 28-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة