காரைக்குடியிலிருந்து 700 பேர் தேர்வானது எப்படி?- TNPSC தேர்வில் முறைகேடு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مارس 26، 2023

Comments:0

காரைக்குடியிலிருந்து 700 பேர் தேர்வானது எப்படி?- TNPSC தேர்வில் முறைகேடு?

காரைக்குடியிலிருந்து 700 பேர் தேர்வானது எப்படி?- TNPSC தேர்வில் முறைகேடு?
டி.என்.பி.எஸ்.சி நில அளவையர், வரைவாளர் பணியிட தேர்வுகளில் முறைகேடு நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி நடத்திய நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இந்தநிலையில் ஆயிரம் நில அளவையர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களுக்கு, காரைக்குடியில் இருந்து மட்டும் 700 பேர் தேர்வாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறிப்பிட்ட ஒரே மையத்திலிருந்து தேர்வாகியுள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றதுபோல், மிகப்பெரிய முறைகேடு காரைக்குடியில் நடைபெற்றிருக்கலாம் எனவும், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவிட வேண்டும் எனவும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة