5 மாவட்டங்களில் வரும் வாரத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مارس 15، 2023

Comments:0

5 மாவட்டங்களில் வரும் வாரத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் வாரத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் முயற்சியாக அவ்வவ்ப்போது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் துறைகள் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வரும் 16ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் தனியார் துறைகள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாமானது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தஞ்சாவூரில் மார்ச் 18ம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. அடுத்தாக மார்ச் 18ம் தேதி திருவள்ளூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது . அதில் திருவள்ளூரில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தர்மமூர்த்தி ராவ் பஹதூர் காலவள கண்ணன் செட்டி இந்து கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். மேலும் இராணிப்பேட்டையில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9 – 5 மணி முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஈரோட்டில் மார்ச் 19 அன்று நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் 3 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.

மேற்சொன்ன மாவட்டங்களில் நடைபெறும் முகாம்களில் 8ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். சுமார் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 40,000 பேருக்கு வேலை வழங்க முடிவு செய்துள்ளனர். அதனால் இந்த வாய்ப்பை தவற விடாமல் முகாமிற்கு வருகை புரிபவர்கள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆதார், சுய விவர குறிப்பு, முன்பதிவு செய்த நகல் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة