குமரியில் ப்ளஸ் 2 தேர்வு எழுதும் முன் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. குழப்பத்தில் போலீசார்
கன்னியாகுமரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்பு, அதிக சத்து மாத்திரைகளை உட்கொண்ட மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி சுதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மகன் மற்றும் மகளை, தாய்மாமன் சுரேஷ் என்பவர் வளர்த்து வந்துள்ளார். 17 வயதான சிறுமி, நாகர்கோவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். மாணவி பொதுத் தேர்வை எழுத இருந்த நிலையில், கடந்த 11ம் தேதி, வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் மாணவியை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அதிக சத்து மாத்திரைகள் உட்கொண்டது பரிசோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து, மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மாணவிக்கு அதிக சத்து மாத்திரைகள் கிடைத்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் செல்போன் மாயமானதால், கடைசியாக செல்போனில் பேசிய நபர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்பு, அதிக சத்து மாத்திரைகளை உட்கொண்ட மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி சுதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மகன் மற்றும் மகளை, தாய்மாமன் சுரேஷ் என்பவர் வளர்த்து வந்துள்ளார். 17 வயதான சிறுமி, நாகர்கோவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். மாணவி பொதுத் தேர்வை எழுத இருந்த நிலையில், கடந்த 11ம் தேதி, வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் மாணவியை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அதிக சத்து மாத்திரைகள் உட்கொண்டது பரிசோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து, மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மாணவிக்கு அதிக சத்து மாத்திரைகள் கிடைத்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் செல்போன் மாயமானதால், கடைசியாக செல்போனில் பேசிய நபர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.