தமிழ் பாடத்திற்கான கற்றல் விளைவு செயலி பணிமனையில் ஆசிரியர்கள் பங்கேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 16, 2023

Comments:0

தமிழ் பாடத்திற்கான கற்றல் விளைவு செயலி பணிமனையில் ஆசிரியர்கள் பங்கேற்பு

தமிழ் பாடத்திற்கான கற்றல் விளைவு செயலி பணிமனையில் ஆசிரியர்கள் பங்கேற்பு

உடுமலை, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழ்ப் பாட கற்றல் விளைவுக்கான செயலி வடிவமைத்தல் பணிமனை நடந்தது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சி செயல் திட்டத்திற்கான பணிமனை, உடுமலை கச்சேரி வீதி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில், இரு நாட்கள் நடந்தது

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் துவக்கி வைத்து, கற்றல் விளைவுகளின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கினார்.

உடுமலை வட்டாரக்கல்வி அலுவலர் ஆறுமுகம் மற்றும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சி செயல்திட்டம் மேற்கொண்டு, பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார் பேசியதாவது: வரும், 2022 - 23ம், கல்வி ஆண்டிற்கான மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சி செயல் திட்டத்தை 'கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெற தமிழ் பாடத்திற்கான செயலியை வடிவமைத்தல் மற்றும் மதிப்பிடுதல்' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் அடிப்படையில் செயல்பாடுகள் மற்றும் மதிப்பீட்டு வினாக்கள் உருவாக்குதல் பணிமனை நடத்தப்படுகிறது.

கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெற தமிழ்ப்பாடத்திற்கான செயலியை எவ்வாறு வடிவமைத்தல், வகுப்பறைச் செயல்பாடுகள், மதிப்பீட்டு வினாக்கள், மதிப்பீட்டுக் கூறுகளை எவ்வாறு வடிவமைப்பது குறித்து விளக்கினார்.

தமிழ்ப்பாடக் கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெற, தமிழ்ப் பாடத்திற்கான செயலி உருவாக்கி, அதனை ஆசிரியர்களிடம் வழங்கி ஆய்வு செய்யப்பட்டது.

இதில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களைச் சார்ந்த, 20 ஆசிரியர்கள் பங்கேற்று, கற்றல் விளைவுகள் தொடர்பான திறன் அடைவைப் பெறுவதற்குத் தேவையான வகுப்பறை செயல்பாடுகள், மதிப்பீட்டு வினாக்கள் ஆகிய வளங்களைத் தயாரித்து, குழுவில் கலந்துரையாடினர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews