முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - After Chief Minister Stalin's announcement, intermediate teachers called off their strike - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 01, 2023

Comments:0

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - After Chief Minister Stalin's announcement, intermediate teachers called off their strike

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - After Chief Minister Stalin's announcement, intermediate teachers called off their strike

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்..



கடந்த ஆறு நாட்களாகவே இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

சம வேலைக்குச் சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்தனர். சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்

இதற்கிடையே இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்தச் சூழலில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews