பொங்கல் கருணைக்கொடை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يناير 10، 2023

Comments:0

பொங்கல் கருணைக்கொடை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கோயில் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைக்கொடை: முதல்வர் உத்தரவு

கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‛முழு நேரம், பகுதி, தொகுப்பூதியம், தினக்கூலி கோயில் பணியாளருக்கு கருணைத்தொகை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக' அறிவித்துள்ளார். மேலும், ரூ.1 லட்சம் ஆண்டு வருவாய் பெறும் கோயில்களின் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 1.1.2023 முதல் அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் 10000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், இதனால் ஆண்டொன்றுக்கு ரூ.7 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة