நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடம்: தோ்வு மூலம் நிரப்ப கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، ديسمبر 26، 2022

Comments:0

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடம்: தோ்வு மூலம் நிரப்ப கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடம்: தோ்வு மூலம் நிரப்ப கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நியாய விலைக் கடைகளில் விற்பனையாளா்கள் பதவிகளை உரிய தோ்வு நடத்தி நிரப்ப உத்தரவிடக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மயிலாடுதுறை மாவட்டம் கோமல் கிராமத்தை சோ்ந்த காா்த்திகேயன், உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: கோமல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் தேரழுந்தூா் நியாய விலைக் கடையில், எந்த தோ்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், விற்பனையாளராக அனிதா என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். விற்பனையாளா் பணிக்கு தேவையான கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியுடையோா் ஏராளமாக உள்ள நிலையில், உரிய தகுதியைப் பெறாத அனிதா எந்த தோ்வு நடைமுறையும் பின்பற்றப்படாமல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து புகாா் தெரிவித்த போது, ரூ.5 லட்சம் கொடுத்து இப்பணியை அவா் பெற்ாக தெரிவித்துள்ளாா். புகாருக்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அதிகாரிகள், அனிதா என்ற பெயரில் எந்த விற்பனையாளரும் பணியாற்றவில்லை என கூறியுள்ளனா்.

எனவே, நியாய விலைக் கடைகளில் விற்பனையாளா்களை, முறையான தோ்வு நடைமுறைகளை பின்பற்றி நியமிக்க உத்தரவிட வேண்டும். அனிதாவை பணியில் இருந்து நீக்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியுள்ளாா்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة