சென்னை, மதுரை, கோவையில் மாநில கலைத் திருவிழா போட்டி:பள்ளிக் கல்வித் துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، ديسمبر 19، 2022

Comments:0

சென்னை, மதுரை, கோவையில் மாநில கலைத் திருவிழா போட்டி:பள்ளிக் கல்வித் துறை

சென்னை, மதுரை, கோவையில் மாநில கலைத் திருவிழா போட்டி:பள்ளிக் கல்வித் துறை

அரசுப் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நிறைவடைந்த நிலையில், மாநில அளவிலான போட்டிகள் சென்னை, மதுரை, கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்த முடிவானது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கடந்த நவம்பா் மாதம் தொடங்கி பள்ளி, வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மாநில அளவிலான போட்டிகள் டிச.27 முதல் 30-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறையில் நடத்தப்படவுள்ளன.

அதன்படி 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு மதுரையிலும், 9, 10-ஆம் வகுப்புகளுக்கு கோவையிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு சென்னையிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவா்கள் தங்கள் பள்ளி ஆசிரியா்களுடன் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். பெற்றோரை அனுப்பக்கூடாது. இதற்கான பயணச் செலவுத் தொகை வழங்கப்படும்.

இத்தகவல் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة