உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، ديسمبر 27، 2022

Comments:0

உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றிதழ்களை வழங்க உத்தரவிட கோரி மருத்துவ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளார் என நீதிபதி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதனால் உயர்கல்வி பயில்வதற்காக உடனடியாக இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றுகளை வழங்கவேண்டும் என உயநீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை. மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல மருத்துவக்கல்லூரிகளில் பயின்ற பல மாணவ, மாணவிகள் உயர் மருத்துவக்கல்வி பயில்வதற்கு தங்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் இன்று இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் மதுரை, கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்ட படிப்புக்கு சேரும் பொழுது அரசுக்கு 2 ஆண்டுகள் மருத்துவ சேவையில் பணியாற்றவேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இதை தவறும் பட்சத்தில் இழப்பீடு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் உள்ளது.

ஆனால் தங்கள் ஏற்கனவே கொரோனா காலத்தில் பணியாற்றியுள்ளனர். எனவே மேலும் பணியாற்ற அவசியம் இல்லை. எனவே தங்களது மருத்துவக்கல்வி சான்றிதழ்களை தங்களிடம் வழங்க உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டானர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மருத்துவ உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் மருத்துவக்கல்வி சான்றிதழ்களை உடனடியாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة