பாடநூல் சேதமடைந்த மாணவர்களுக்கு புதிதாக வழங்க நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، ديسمبر 12، 2022

Comments:0

பாடநூல் சேதமடைந்த மாணவர்களுக்கு புதிதாக வழங்க நடவடிக்கை

பாடநூல் சேதமடைந்த மாணவர்களுக்கு புதிதாக வழங்க நடவடிக்கை

பலத்த மழை காரணமாக மாணவ, மாணவிக ளின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாடநூல்கள், கல்வி உபகரணங்கள் சேதமடைந்திருந்தால் அவற்றை புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகள் பாதிப்படைந்தன. மேலும், பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தன. இதனால் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சான் றிதழ்கள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை சேதமடைந்ததாக மாணவர்கள்,பெற்றோர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும் போது, 'புயல் மற்றும் கனமழையால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாடநூல்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் எதுவும் சேதமடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பொருள்கள் வழங்கப்படும். இதன் விவரங்கள் அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக சேகரிக்கப்பட்டு விநியோ கிக்கப்படும்.

அதேபோல், கல்வி ஆவணங்கள் ஏதும் சேதமடைந்தால் மாற் றுச் சான்றிதழ்கள் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும். பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீர், முறிந்து விழுந்த மரங்களை உடனே அகற்றவும் தலைமையாசிரியர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டடங்கள் பாதிக்கப்பட்டிருந் தால் மாற்று வகுப்பறைகளில் மாணவர்களை அமர வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة