பாலியல் தொல்லை கொடுத்த புகார் - கௌரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் - Sexual harassment complaint - Honorary lecturers sacked - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، ديسمبر 21، 2022

Comments:0

பாலியல் தொல்லை கொடுத்த புகார் - கௌரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் - Sexual harassment complaint - Honorary lecturers sacked

பாலியல் தொல்லை கொடுத்த புகார் - கௌரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் - Sexual harassment complaint - Honorary lecturers sacked

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரண்டு கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் திருச்செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக கடந்த 16ம் தேதி குற்றச்சாட்டுகள் எழுந்தது. அன்று மாலை பாதிக்கப்பட்ட ஒரு மாணவிக்கு ஆதரவாக அவர்கள் உறவினர்கள் அந்த கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர் முத்துக்குமரன் என்பவரை தாக்க முற்பட்டதோடு அவரது இரு சக்கர வாகனத்தையும் கல்லூரிக்குள் புகுந்து அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டு அமைதியை ஏற்படுத்திய நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சிலர் கவுரவ விரிவுரையாளர்களின் பாலியல் சீன்டகள் குறித்து கல்லூரி முதல்வர் திருச்செல்வத்திடம் புகார் மனு அளித்து அளித்துள்ளார்.மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் திருச்செல்வம் ஆறு பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தார்.

அந்த விசாரணை குழு அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அக்கல்லூரியில் பணியாற்றி வந்த வணிக நிர்வாகவியல் துறை விரிவுரையாளர் முத்துக்குமரன்,விலங்கியல் துறை கவரவ விரிவுரையாளர் கலையரசன் ஆகிய இருவரை பணிநீக்கம் செய்து கல்லூரியின் முதல்வர் திருச்செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة