12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவு தேர்வு குறித்து அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் தொடர்பாக - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، ديسمبر 29، 2022

Comments:0

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவு தேர்வு குறித்து அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் தொடர்பாக - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் முறைகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவு தேர்வு குறித்து அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் தொடர்பாக,

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி ஆர்வமுள்ள அரசு பள்ளி மாணவர்கள் சரியான நேரத்திற்கு உயர்கல்வியில் சேர்ந்து படிக்க வசதியாக வரவிருக்கும் நுழைவுத் தேர்வுகளின் விவரங்கள் இத்துடன் இணைத்து பகிரப்படுகிறது. ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தற்போதைய நிலை மற்றும் விண்ணப்பம் திறக்கும் தேதி, விண்ணப்பிக்கும் கடைசி தேதி நுழைவுத் தேர்வு கட்டணம் மற்றும் தகுதிகள் போன்றவற்றை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 15 நுழைவுத் தேர்வுகளின் இரண்டாவது புதுப்பிப்பு இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு விவரங்களை தெரிவித்து அதில் பங்கேற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி ஆலோசக ஆசிரியர்கள் தகுதியான மாணவர்களை நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தயார்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة