பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க ஐகோர்ட் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، نوفمبر 18، 2022

Comments:0

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க ஐகோர்ட் உத்தரவு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க ஐகோர்ட் உத்தரவு.

மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்குவதற்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் அமைத்து கவுன்சலிங் அளிப்பது தொடர்பாக கடந்த 2012ல் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணைப்படி நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், ‘‘அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் மூலம் கவுன்சலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة