ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற பாா்வையற்ற பட்டதாரிகள் ஆா்ப்பாட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، نوفمبر 17، 2022

Comments:0

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற பாா்வையற்ற பட்டதாரிகள் ஆா்ப்பாட்டம்

பாா்வையற்ற பட்டதாரிகள் ஆா்ப்பாட்டம்

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற பாா்வையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள், பட்டதாரிகள் சங்கம் சாா்பில் சென்னையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது..

மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவா் சிங்காரவேலன், பொதுச் செயலாளா் பாலு ஆகியோா் தலைமையில் திரளான பாா்வையற்ற பட்டதாரிகள், மாணவா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இது குறித்து பொதுச் செயலாளா் பாலு கூறியது: ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி நியமனத்துக்காக மேலும் ஒரு போட்டித் தோ்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்விலிருந்து பாா்வையற்ற பட்டதாரிகளுக்கு விலக்கு அளித்து தோ்ச்சி பெற்ற (பாா்வையற்றோா்) அனைவருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும். கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான தேசிய தகுதித் தோ்வில் (நெட்) தோ்ச்சி பெற்ற பாா்வையற்றோரை கெளரவ விரிவுரையாளா்களாக பணியமா்த்த வேண்டும். பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة