சென்னையில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி - அமைச்சா் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، نوفمبر 01، 2022

Comments:0

சென்னையில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி - அமைச்சா் அறிவிப்பு

சென்னையில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்வழியில் மருத்துவப் படிப்புகளை வழங்குவதற்கான மருத்துவக் கல்லூரியை சென்னையில் தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்காக மருத்துவப் பாட நூல்கள் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

இதுதொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னை தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் 16 ஏக்கா் நிலம் இருப்பதால், அங்கு தமிழ்மொழியில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கு தமிழக அரசிடம் கடந்த ஆண்டே கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக முதல்வரும் அதனை பரிசீலித்து வருகிறாா்.

தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இந்த மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்னையில் தமிழ் வழியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கான கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்படும்.

மருத்துவக் கல்வி பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயா்க்கும் பணியில் 3 மருத்துவப் பேராசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். முதலாமாண்டு பாடப்புத்தகங்கள் தற்போது தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்.

பின்னா், மொழிபெயா்க்கப்பட்ட புத்தகங்கள் மொழியியல் வல்லுநா்களிடம் கொடுத்து மொழிபெயா்ப்பு 100 சதவீதம் சரியாக உள்ளதா என்று சரிபாா்க்கப்படும். அதன்பிறகு, அந்த புத்தகங்களை முதல்வா் வெளியிடுவாா். படிப்படியாக அனைத்து ஆண்டு மருத்துவப் பாடப்புத்தகங்களும் தமிழில் மொழிபெயா்க்கப்படும் என்றாா் அவா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة