வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 17 வயதிலேயே விண்ணப்பிக்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، نوفمبر 03، 2022

Comments:0

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 17 வயதிலேயே விண்ணப்பிக்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 17 வயதிலேயே விண்ணப்பிக்கலாம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, நவ. 3: தமிழகத்தில் 17 வயதுடைய இளை ஞர்கள், இளம் பெண்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி. இவர்களில், 55.37 சதவீதம், அதாவது 3.42 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலுடன் இணைக்க, தங்கள் ஆதார் எண்களை வழங்கி உள்ளனர். கள் ளக்குறிச்சி, அரியலுார், தர்மபுரி மாவட்டங்களில், 80 சதவீதத்துக்கும் அதிகமானோர், ஆதார் எண் வழங்கி உள்ளனர். மிகக் குறைவாக சென்னையில் 20 சதவீதம் பேர் மட்டுமே வழங்கி உள்ளனர். நகர்ப்புறங்களில் குறைவாகவும், ஊரகப் பகுதிகளில் அதிகமாகவும் வாக்காளர்கள் ஆதார் எண் வழங்கி உள்ளனர். மொத்தம் 31 மாவட்டங்களில் 50 சதவீ தத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், ஆதார் எண் அளித்துள்ளனர்.

வரும் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அன்று முதல் வாக்காளர் பட்டி யல் சுருக்க திருத்தப் பணி துவங்கும். இம்முறை 17 வயதுடைய இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க, விண்ணப் பம் அளிக்கலாம். அவர்களுக்கு 18 வயதானதும், அவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்ப டும். இவ்வாறு அவர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة