ஆசிரியர்களுக்கு தீபாவளி முன் பணம் மற்றும் சம்பளம் பெறுவதில் சிக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أكتوبر 20، 2022

Comments:0

ஆசிரியர்களுக்கு தீபாவளி முன் பணம் மற்றும் சம்பளம் பெறுவதில் சிக்கல்

தீபாவளி முன்பணம் பெறுவதில் சிக்கல்

சென்னை : பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளால், ஆசிரியர்களுக்கு தீபாவளி முன் பணம் மற்றும் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளி கல்வி அலுவலகங்களிலும், மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் கட்டாய இடமாறுதல் செய்யப்பட்டனர். இந்த இடமாறுதல் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு பள்ளியின் கல்வி அலுவலக எல்லைகளும், பணியாளர்களும் மாறியுள்ளனர்.

நிர்வாக சீர்திருத்த எல்லைகளின்படி, பள்ளிகளின் விபரங்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் பணி ஆவணங்கள் உள்ளிட்டவை, எமிஸ் நிர்வாக தளத்தில் புதிய எல்லைக்கு மாற்றப்படுகின்றன.

இதனால், தமிழகம் முழுதும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான தீபாவளி முன் பணத்துக்கு, கருவூலத்துக்கு அறிக்கை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாத ஊதியம் வழங்குவதற்கான பணி விபர மற்றும் ஊதியம் வழங்க கோரும் அறிக்கை தயார் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக மாற்ற பிரச்னைக்கு, உரிய தீர்வு காண வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة