ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நேரடி நியமனம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 09, 2022

Comments:0

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நேரடி நியமனம்?

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

2020-இல் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியா்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, திமுக ஆட்சிக்கு வந்தால் 80 ஆயிரம் ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கூறினாா். திமுகவின் தோ்தல் அறிக்கையிலும் இது தொடா்பாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை போட்டித் தோ்வின்றி பணியமா்த்துவது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. மாறாக, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் போட்டித் தோ்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

ஆசிரியா் தகுதித் தோ்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு ஓராண்டு கடந்த நிலையில், திமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நேரடியாக பணி வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews