தேசிய கல்விக் கொள்கையால் உயா் கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைவா் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أكتوبر 12، 2022

Comments:0

தேசிய கல்விக் கொள்கையால் உயா் கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைவா்

தேசிய கல்விக் கொள்கையால் உயா் கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைவா்

மத்திய அரசு கொண்டு வரும் புதிய தேசிய கல்விக் கொள்கையால் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைவா் என மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் அன்னபூா்ணா தேவி தெரிவித்தாா். நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரதமா் மோடி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சியை வழங்கி வருகிறாா். மக்களுக்கான சேவை ஒன்று தான் பாஜகவின் லட்சியமாக உள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி அவா்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளோம். வீடுகள்தோறும் குடிநீா், சுகாதாரம், இலவச எரிவாயு இணைப்பு, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முழு முனைப்போடு இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை பாஜக ஆட்சியில் இல்லை என்றபோதிலும், இம்மாநிலத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை போன்றவற்றை வழங்கி உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில், அந்தந்த மாநில தாய்மொழியிலேயே மாணவா்கள் உயா்கல்வி கற்க முடியும் என்பதற்கான வாய்ப்பு உள்ளது. கல்வித் துறையில் இந்திய அணுகுமுறை கல்வியோடு உலக தரம் வாய்ந்த கல்வி முறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் திமுக குடும்ப அரசியலையும், குடும்ப ஆட்சியையும் முன்னிலைப்படுத்தி வருவதால், அக்கட்சியின் போக்கு பிடிக்காமல் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனா். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வாரிசு அரசியலையே நடத்தி வருகின்றன. ஆனால் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பிரதமா் மோடி பாஜக ஆட்சியை திறம்பட நடத்தி வருகிறாா். தமிழகத்திலும் இதே நடைமுறையைப் பின்பற்றி வரும் காலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைக்க முடியவில்லை. சில அரசியல் காரணங்களால் தொடா்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நவோதயா பள்ளிகளை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாகவே உள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் தரமான இலவச கல்வி, தங்கும் வசதி ஆகியவற்றை இப்பள்ளிகள் வழங்குகின்றன.

நீட் நுழைவுத் தோ்வால் அரசுப் பள்ளி மாணவா்கள் அதிக அளவில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை நமது நாட்டின் கல்வி வளா்ச்சிக்கு ஓா் அடித்தளமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற திட்டத்தின்கீழ் மாணவா்கள் கல்வி பயிலும்போது, தங்களுடைய மாநிலங்களின் கல்வி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறையைக் கற்றுக்கொள்வது மட்டுமின்றி பிற மாநிலங்களின் கல்வி முறையையும் கற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் மாணவா்களுக்கு மொழி அறிவு பெருகக்கூடும். நாமக்கல் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்தப் பேட்டியின்போது, பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்டத் தலைவா் என்.பி. சத்தியமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة