ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்படவிட்டாலே போதும்: அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 05, 2022

Comments:0

ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்படவிட்டாலே போதும்: அன்பில் மகேஷ்

ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்படவிட்டாலே மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவார்களென அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பேசியதாவது:

ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்பட்டாலே மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்திவிடுவார்கள். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக்கூட பொருட்படுத்தாமல் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் வகையில் ஒரு சிறந்த உறவாக ஆசிரியர்களின் பணி அமைந்துள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews