உயர்கல்வி பெற கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 02, 2022

Comments:0

உயர்கல்வி பெற கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வலியுறுத்தல்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உயர்கல்வி பெற கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய அளவில் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு இன்று வரை உயர்த்தப்படவில்லை. எனவே, கிரீமிலேயர் வருமான வரம்பை இப்போது உயர்த்துவதற்கு எந்த தடையும் கிடையாது. எனவே, 2020ம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை ஒன்றிய அரசு காக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews