அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை / மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 29, 2022

Comments:0

அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை / மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை / மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - Commissioner of School Education orders to conduct special morning/evening classes for students appearing for government public examination

11. இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)

- அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளியில் மான்யம் பெறும் வகுப்புகளுக்கு அரசால் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மான்யம் பெறும் வகுப்புகளில் 01.08.2022- நிலவரப்படி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர் பணியிடங்கள் அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலர் நிலையில் நிர்ணயம் செய்து 15.10.2022 க்குள் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

பணியாளர் நிர்ணய ஆணையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை கண்டறிந்து முதலில் தேவையுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குப் பணிநிரவல் செய்யப்படவேண்டும்.

மேலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பின் அதே வருவாய் மாவட்டத்திற்குள் தேவையுள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றுபணியில் பணிபுரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

மேற்காண் பொருள் சார்ந்து விவரத்தினை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

12. பள்ளிக் கல்வி ஆணையர் - அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை அல்லது மாலையில் கூடுதல் நேரம் (Special Class) ஒதுக்கி பள்ளிகளில் பாடம் நடத்தப்படவேண்டும். மாணவர்கள் எந்தப் பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெறுகிறார்கள், அதற்கான காரணம் குறித்து சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கூட்டம் நடத்தி மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அப்பள்ளிகளுக்கான Action Plan குறித்த விவரத்தினை இணைஇயக்குநர் (பணியாளர் தொகுதி)-க்கு அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews