அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்: விஜயகாந்த் அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 01, 2022

Comments:0

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்: விஜயகாந்த் அறிக்கை

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆமித்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருப்பதை பாராட்டுகிறேன்.
இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் மதிய உணவு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது போன்று காலை சிற்றுண்டி திட்டத்தையும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். காலை சிற்றுண்டி திட்டம் மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews