ஆசிரியர்கள் நியமனம் எண்ணிக்கை அதிகரிப் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أغسطس 29، 2022

Comments:0

ஆசிரியர்கள் நியமனம் எண்ணிக்கை அதிகரிப்

ஆசிரியர்கள் நியமனம் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை, ஆக. 29

அரசு பள்ளிகளுக்கு, முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளோர் எண்ணிக்கையை, 3,236 ஆக, ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகரித்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி ஆசிரியர்கள் பதவியில், 2,207 இடங் களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம், இந் தாண்டு பிப்ரவரியில் கணினி வழி தேர்வை நடத்தியது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள். ஜூலையில் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற் றவர்களுக்கு, ஆன்லைன் வழி ஆவண சரி பார்ப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கான எண்ணிக்கையை, ஆசிரி யர் தேர்வு வாரியம் உயர்த்தியுள்ளது. முதல் அறிவிப்பில், 2,207 காலியிடங்கள் நிரப்பப் படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்பின், 3,236 இடங்களாக உயர்த் தப்பட்டது. நேற்றைய அறிவிப்பில், 3,236 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. காலியிடங்கள் பட்டி யலையும் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், தேர்ச்சி பெற்றவர்களுக் கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு விரைவில் நடத்தப்படும்; இதற்கான கடிதத்தை, http:// trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக் கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறி வித்துள்ளது. கூடுதல் விபரங்களை, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة