கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أغسطس 23، 2022

Comments:0

கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4,083 கௌரவ விரிவுரையாளா்களும், பல்கலை.களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1500 கௌரவ விரிவுரையாளா்களும் பணிபுரிகின்றனா். மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அவா்களின் நிலை கௌரவமாக இல்லை.

மாணவா்களுக்கு உயா்கல்வி கற்பிக்கும் அவா்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம் ரூ.700-க்கும் குறைவு தான். இந்த அளவுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்குவதை நியாயப்படுத்த முடியாது. கௌரவ விரிவுரையாளா்கள் கௌரவமாக பணி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீா்வு அவா்களை பணி நிரந்தரம் செய்வதுதான்.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன.

எனவே, இனியும் தாமதிக்காமல், கௌரவ விரிவுரையாளா்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة