B.E 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவக்கம்: செயலாளர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 25, 2022

Comments:0

B.E 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவக்கம்: செயலாளர் தகவல்

பிஇ நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது என சேர்க்கை செயலாளர் பழனி தெரிவித்தார். பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பி.இ மற்றும் பி.டெக் நேரடி இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான கவுன்சலிங்கை ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜூன் 24ம் தேதி துவங்கி கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவங்கி செப்.12ம் தேதி வரை நடக்கவுள்ளது என மாணவர் சேர்க்கை செயலாளரும், கல்லூரி முதல்வருமான முனைவர் பழனி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி பி.இ நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு 65 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கு 24,062 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தகுதியுள்ள 20,574 மாணவர்களுக்கு தரவரிசை தயார் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை, அவர்களுக்கான இணையதள கவுன்சலிங் விவரங்கள் www.tnlea.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு கலந்தாய்வு வரும் 29 மற்றும் 30ம் தேதி நடக்கிறது. பொது கலந்தாய்வு செப்.11ம் தேதியும், பி.எஸ்சி மாணவர்களுக்கு 12ம் தேதியும் நடக்கிறது. விபரங்களுக்கு 94436 61901, 98431 53330 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews