இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அறிவிப்பு: கருத்துகளை தெரிவிக்க யுஜிசி அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 29, 2022

Comments:0

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அறிவிப்பு: கருத்துகளை தெரிவிக்க யுஜிசி அழைப்பு

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடுவழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என்று யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.

கரோனா பரவலுக்குபின் நம்நாட்டில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. 2019-ம் ஆண்டில் 75 ஆயிரமாக இருந்த வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 2021-ல் 24,439 ஆக சரிந்துவிட்டது.

வழிகாட்டுதல்கள்

இதையடுத்து இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கையை எளிமையாக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.

இதுதவிர நம்நாட்டின் உயர்கல்வியை உலகமயமாக்க தேசியகல்விக்கொள்கை - 2020-ம்வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இளநிலை, முதுநிலை படிப்புகளில் வெளிநாட்டு மாணவர்களுக்காக 25 சதவீத இடங்களை உருவாக்க அனுமதிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews