MA படிப்பு: செப்., 30 வரை அவகாசம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 30, 2022

Comments:0

MA படிப்பு: செப்., 30 வரை அவகாசம்!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஐந்தாண்டு கால முதுகலை தமிழ் படிப்பு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, செப்., 30 வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இதற்கான சேர்க்கை விண்ணப்பங்களை, www.ulakaththamizh.in என்ற இணையதளம் வாயிலாக பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, 'இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை -- 113' என்ற முகவரியில், நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும், 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews