அகவிலைப்படி உயர்வை 1-1-2022 முன் தேதியிட்டு வழங்கிடுக - தேசிய ஆசிரியர் சங்கம் செய்தியறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 15, 2022

Comments:0

அகவிலைப்படி உயர்வை 1-1-2022 முன் தேதியிட்டு வழங்கிடுக - தேசிய ஆசிரியர் சங்கம் செய்தியறிக்கை

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு

செய்தியறிக்கை

அகவிலைப்படி உயர்வை 1-1-2022 முன் தேதியிட்டு வழங்கிடுக.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுதந்திர தின உரையில் 1-7-2022 முதல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு 3% உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளதை முழுவதும் வரவேற்க இயலவில்லை

மத்திய அரசானது பணவீக்கம் மற்றும் விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படையில் தனது ஊழியர்களுக்கு 1-1-2022 முதல் 34% அகவிலைப்படி வழங்கி வருகிறது அதற்கு முன் 1-7-2021 முதல் 31 % அகவிலைப்படியினை வழங்கி வந்தது ஆனால் தமிழக அரசோ 6 மாதம் காலம் தாழ்த்தி 1-1-2022 முதல் வழங்கிவிட்டு தற்போதைய அகவிலைப்படியினையும் 6 மாதம் காலம் தாழ்த்தி 1-7-2022 வழங்குவது ஒரு புது நடைமுறை உருவாக வழிவகுக்கிறது என்பது மட்டுமன்றி மத்திய அரசுக்கு இணையானது என்பது உண்மைக்கு மாறானதும் ஆகும்

ஆகவே தமிழக முதல்வர் உடனடியாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை 1-1-2022 முதல் வழங்க உத்தரவு இட வேண்டும் எனவும் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு ஆகியவை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கேட்டுக்கொள்கிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews