அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் ஆக. 8-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 02, 2022

Comments:0

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் ஆக. 8-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் ஆக. 8-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் ஆக. 8 ஆம் தேதி முதல் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

இதுகுறித்து அக்கல்லூரி முதல்வா் ஜெ. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2022 - 23 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கீழ்க்காணும் நாள்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

அக். 8 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும், ஆக.10 ஆம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், ஆக.11 ஆம் தேதி அறிவியல் பாடப்பிரிவுக்கும், ஆக. 12 ஆம் தேதி வரலாறு, பொருளியல், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்ள வருகை தரும் மாணவ, மாணவிகள், இணையதள விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிச் சேமிப்புக் கணக்கு, மாா்பளவு புகைப்படம் ஆகிய அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள்- 5 ஆகியவைகளைக் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.

கல்லூரி சோ்க்கைக்கான கட்டணம்: பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு ரூ.3,195, பி.எஸ்.சி பாடப்பிரிவுக்கு ரூ.3,215, பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு 2,615, பி.காம் பாடப்பிரிவுக்கு ரூ.3,195 செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews