ஆட்சியரிடம் விடுமுறை வேண்டாம் என்ற 6-ம் வகுப்பு சிறுமி - சமூக ஊடகங்களில் வைரல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 11, 2022

Comments:0

ஆட்சியரிடம் விடுமுறை வேண்டாம் என்ற 6-ம் வகுப்பு சிறுமி - சமூக ஊடகங்களில் வைரல்

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பது பொதுவான நம்பிக்கை.

இருப்பினும், கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி, எல்லா குழந்தைகளும் விடுமுறையில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார், ஏனெனில் அவர் வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் விடுமுறை அறிவிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சனி, ஞாயிறு பள்ளி விடுமுறையைத் தொடர்ந்து பலத்த மழை காரணமாக வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கட்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. செவ்வாய்கிழமை முகரம் பண்டிகை காரணமாக விடுமுறை.

இந்நிலையில், வயநாட்டைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் சபூரா நெளஷத் என்ற மாணவி, புதன்கிழமையும் (நேற்று) விடுமுறை அளிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கீதாவுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அந்த மாணவியின் மின்னஞ்சலை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆட்சியர் கீதா, அந்த மாணவியின் படிக்கும் ஆர்வத்தையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டியுள்ளார். சிறுமியின் கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews