ரூ.50க்கு தேசிய கொடி ஆசிரியர்களுக்கு விற்பனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أغسطس 11، 2022

Comments:0

ரூ.50க்கு தேசிய கொடி ஆசிரியர்களுக்கு விற்பனை

ரூ.50க்கு தேசிய கொடி ஆசிரியர்களுக்கு விற்பனை

சென்னை:'சுதந்திர தின விழாவை ஒட்டி, பகுதி நேர ஆசிரியர்கள் தவிர, மற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள், தேசிய கொடி வாங்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதன்மை கல்வி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. 'எமிஸ்' இணைய தளத்தில் உள்ள எண்ணிக்கைப்படி, ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும், ஒரு கொடிக்கு, 50 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடி விற்பனை இல்லை. இன்று முதல், 19ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி, அதை புகைப்படம் எடுத்து, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை தலைமை ஆசிரியர்கள் தொகுத்து, முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில், சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறுகையில், ''எல்லா வகை பணிகளிலும், பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்துகின்றனர். ''அதேநேரம், நாட்டின், 75வது சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்பது போல், பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது; அடிப்படை உரிமைக்கு எதிரானது,'' என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة