மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டம்:அஞ்சலகங்களில் ஆக.26 வரை விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 23, 2022

Comments:0

மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டம்:அஞ்சலகங்களில் ஆக.26 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் அளிக்க இம் மாதம் 26 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுதொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கோ.சிவாஜிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் தங்க பணமாக்கத் திட்டத்தின் கீழ் தங்கப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1 கிராம் 24 காரட் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.5197 ஆகும். இந்தப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்து அஞ்சலகங்களிலும் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இம் மாதம் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தனிநபா் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டு தொகைக்கு 2.50 சதவிகித வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் அன்றுள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம்.

பத்திரம் வாங்கும்போது வாடிக்கையாளா்கள் ஆதாா் அட்டை, பான் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கு எண் கட்டாயமாகும். பத்திரம் தங்க கிராமின் மடங்காக உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதிகளில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews