தேர்வில் மதிப்பெண் குறைவு - 10-ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 04, 2022

Comments:0

தேர்வில் மதிப்பெண் குறைவு - 10-ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை..!

10ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை..!


ஈரோடு அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததில் பெற்றோர் கண்டித்ததால் மனவருத்ததில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 10-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் கண்டித்ததில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவி எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை முயன்ற சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அருகே கல்லுக்கடைமேடு பகுதியை சேர்ந்தவர் பசீர் அகமது. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மகளான 10-ம் வகுப்பு பள்ளி மாணவி அருகில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த காலாண்டு தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருந்ததால் மாணவியை அடிக்கடி டி.வி பார்க்காதே எனவும் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படிக்கவரவில்லையென மன உளைச்சலில் இருந்த பள்ளி மாணவி பெற்றோர் இல்லாத நேரத்தில் எலி மருந்து எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது தொடர்பாக கடந்த 1-ம் தேதி அடிக்கடி வாந்தி எடுக்கவே அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெற்றோர் திட்டியதாக பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் பெற்றோர்கள் முன்னிலையில் சிறுமிகளை திட்டுவதை குறித்து பெற்றோர்களிடம் அறிவுரை வழங்கினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews