சென்னையில் செப்.10-இல் 'ஜாக்டோ ஜியோ' மாநாடு: முதல்வர் பங்கேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أغسطس 25، 2022

Comments:0

சென்னையில் செப்.10-இல் 'ஜாக்டோ ஜியோ' மாநாடு: முதல்வர் பங்கேற்பு

'ஜாக்டோ ஜியோ' அமைப்பு சார்பில் சென்னையில் செப்டம்பர் 10 இல் நடைபெறும் வாழ்வாதார மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ. செல்வம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியா ளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் முந் தைய ஆட்சியின்போது கோரிக்கை களை வலியுறுத்தி பல போராட் டங்களை நடத்தியபோதும், எங்க ளது மனுவைக் கூட பெறவில்லை.

தற்போதைய திமுக அரசு ஜாக்டோ ஜியோ கோரிக்கை கள் தொடர்பாக 3 முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. எங்க ளது கோரிக்கை மனுவையும் முதல் வரிடம் வழங்கியுள்ளோம்.

முந்தைய ஆட்சியின்போது கோரிக்கைகளுக்காக போராட் டம் நடத்தியபோது, குறைந்தபட் சம் பேச்சுவார்த்தை கூட நடத்த வில்லை. அதனால் போராட்டங் களை வீரியத்துடன் நடத்தினோம். தற்போதைய முதல்வர் 'ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவ தாக உறுதி அளித்திருக்கிறார்.

'ஜாக்டோ ஜியோ' சார்பில் சென் னையில் செப்டம்பர் 10 ஆம் தேதி மாநாடு நடத்தவுள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் என்றார்.

'ஜாக்டோ - ஜியோ' மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க. நீதி ராஜா, வெ. பாபு பிரேம்குமார், உயர்மட்டக்குழு உறுப்பினர் இரா. தமிழ் ஆகியோர் உடனிருந்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة