பள்ளியில் மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை..! எச்சரிக்கை விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 26, 2022

Comments:0

பள்ளியில் மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை..! எச்சரிக்கை விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

“சமீப காலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என்னை மனவேதனை அடைய வைத்துள்ளன” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க | குரூப் 4 தோ்வு: 18.50 லட்சம் போ் எழுதினா்: வினாக்கள் எளிதாக இருந்ததாக கருத்து

சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைறபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்றார். அப்போது, அந்த விழாவில் முதல்வர் பேசியதாவது, “ பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது. தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. கொரோனா பாதிப்பால் எனது தொண்டை பாதிக்கப்பட்டிருந்தாலும், எனது தொண்டு பாதிக்கப்படவில்லை. “

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிக்க | அன்று ஆசிரியர்.. இன்று நாட்டின் முதல் குடிமகள் - திரௌபதி முர்மு குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள்

கள்ளக்குறியிச்சில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews