பள்ளி சொத்துக்களை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 27, 2022

Comments:0

பள்ளி சொத்துக்களை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை

பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர்,பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும். பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!

பள்ளிகளில் மாணவர்களால் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கு, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களே முழுப் பொறுப்பு என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த பொருளை பெற்றோர்களோ அல்லது பாதுகாவலரோதான் மாற்றித் தரவேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான செயல்களில் குழந்தைகள் ஈடுபட்டால், முதலில் அவர்களுக்கு தக்க அலோசனை வழங்க வேண்டும். அடுத்தடுத்து தவறான செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை நல்வழிப்படுத்த ஒழுங்கு முறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாலலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews