கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை கல்வி உதவித்தொகை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يوليو 31، 2022

Comments:0

கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை கல்வி உதவித்தொகை அறிவிப்பு

சென்னை:'கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித் தொகை பெற, செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாவலாசிரியர், பத்திரிகையாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகங்களை கொண்ட, கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவாக துவக்கப்பட்ட, 'கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை' சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2022 - -23-ம் ஆண்டில் 10 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.அதனால், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨, கல்லுாரி, பாலிடெக்னிக் மாணவர்கள், இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கடைசியாக எழுதிய தேர்வில், 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள்; 60 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்ப படிவத்தை, www.kalkionline.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, மாணவர் தன் கைப்பட பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், அதில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, 'கீதம், முதல் மாடி, 14, நாலாவது பிரதான சாலை, கஸ்துாரிபாய் நகர், அடையாறு, சென்னை- 600 020' என்ற முகவரிக்கு, செப்டம்பர் 10-ம் தேதிக்குள், தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة